திண்டுக்கல் அரசுமருத்துவமனையின் அகோர நிலை

டந்த 6/8/2010 அன்று திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணைக்கு நண்பர் ஒருவருக்கு CT ஸ்கேன் எடுக்க சென்றோம். ஆனால் நான் அங்கு கண்ட காட்சிகள் மனதுக்கு நெருடலாகவே இருந்தது காரணம் மருத்துவமனைக்குள் நாய்களும் பன்றிகளும் சர்வசாதாரணமாக உள்ளே திரிகிறது .
அங்கு அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளுக்கும் குறை இல்லை இத்தனைக்கும் மருத்துவமனை உள்ளேயே ஒரு காவல் நிலையமும் உள்ளது.

இதை விட கொடுமை என்னவென்றால் ஸ்கேனிங் பிரிவில் 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவன் சர்வ சாதாரணமாக அனத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறான் ஸ்கேனிங் ரிப்போர்ட்களையும் ஸ்கேனிங் படங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டும் உள்ளான்
இதயும் கிழே உள்ள புகைப்படத்தின் மூலம் பாருங்கள்
ஸ்கேனிங் எடுக்க வெளி நோயளிகளுக்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 வாங்குகிறார்கள் நாங்கள் சென்றபோது இரண்டு நோயளிகளுக்கு கட்டண ரசீது தரவில்லை கேட்டால் வெண்டியதில்லை என்று கூறிவிட்டார்கள்.
மொத்தத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரக்கேடும் தில்லுமுல்லும் நன்றாகவே உள்ளது.
கவணிக்கவேண்டியவர்கள் கவணித்தால் சரி !

விதியே விதியே என்ன செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...





ஈழத் தமிழருக்காகவே உயிர் விடுகிறேன் முத்துக்குமாரின் கடைசி கடிதம்.

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.
இந்தியாவின் போர் நியமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்.
உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் . இந்த மாதம், இந்த வாரம், இதுவரைக்கும் என்னை எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.
தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...
உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள்.
மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.
சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!
போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது.
இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்.
உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.
உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.
என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.
எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே..
உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?
எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.
பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமாம், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாம்!

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.
மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலீஸ்தான்.
இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்கப்பாற்பட்டது.
ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள்.
மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமது அலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.
இது இனப்படுகொலை இல்லையா?
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை.
சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைல-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில், கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே. ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?
சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்...
எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டும் சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன், கு.முத்துக்குமார்,
கொளத்தூர், சென்னை.

தமிழர்களுக்கு எதிராக கருணாநிதியின் துரோகம் தமிழ் உணர்வாளார் சீமான் கைது


ய்[யோ]யா கருனாநிதியே உங்களுடைய காங்கிரஸ் விசுவசத்தை காட்ட தமிழர்களுக்காக போராடக்கூடிய தமிழ் உணர்வாளர் சீமானை கைது செய்து புண்ணியத்தை தேடிகொண்டீர்களோ.
உங்களுடைய ராசாவின் மத்தியமைச்சர் காப்பாற்ற துடிக்கும் நீங்கள் அதில் சிறிதளவேணும் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்றுவதிலும் கவனத்தை செலுத்துங்கள்.

உங்களுடைய கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர்களே
தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது அதன் படி நடக்கவும் வேண்டும். மீனவன் கடலில் சிங்கள காடையர்களிடம் உயிருக்கு போராடும் போது இங்கு உம்முடைய அமைச்சர்களின் பதவியை காப்பாற்ற அலையாய் அலைகிறீற்கள். இதுதான் உம்முடைய தமிழ்பற்றா ?
தமிழனுடைய உயிர்தானே போனால் போகிறது என்று விட்டுவிட்டீர்களா ?
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது அதன் படி நடக்கவும் வேண்டும். அதை விட்டுவிட்டு டெல்லிக்கு கடிதம் எழுதி பிரயோஜனம் இல்லை . உங்களுக்குத்தான் ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற மத்தியரசுக்கு எதிராக போராடவோ பேசவோ மனதில்லை, அதற்க்காக போராடுபவர்களுக்காவது உதவி செய்யலாம் பொன்மனசெம்மல் முன்னால் தமிழக முதல்வர் காலஞ்சென்ற திரு. எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தாரே அந்த வழியையாவது பின்பற்றலாமே . அட உதவி செய்யத்தான் முடியலை உபத்திரமாவது கொடுக்காமல் இருக்கலாமே !
சீமான் அப்படி என்ன தவறாகவா பேசிவிட்டார் இனிமேல் இலங்கை கடற்ப்படை தமிழக மீனவர்களை தாக்கினால் தமிழர்களை காப்பாற்ற நாங்கள் இங்குள்ள சிங்களனை தாக்குவோம் என்றுதானே சொன்னார் , வேறு ஒன்றும் தவறாக சொல்லவில்லையே ? இதில் இந்திய இறையான்மைக்கு எதிராக எங்கே பேசினார் ?
தேசிய பாதுகாப்பு சட்டத்தின்
கீழ், ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளீர்கள். நீங்கள் இந்தி மொழிக்கெதிராக போராடியதற்க்கெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டமும் மேற்க்கண்ட சட்டப்பிரிவுகளும் பொருந்தாதா ? என்னய்யா கொடுமையாய் இருக்கிறது!
ராஜிவ் காந்தி என்றைக்கு அண்டோனியாவை அதாங்க சோனியாகந்தியை என்றைக்கு திருமணம் செய்தாரோ அன்றைக்கே இந்தியாவிற்க்கும் தமிழனுக்கும் ஜென்மச்சனி பிடித்தது. மொத்தத்தில் இப்போதைக்கு சோனியாகாந்தி இந்தியாவின் மருமகளா ? இல்லை இலங்கையின் மருமகளா ? என்பதுதான் இந்தியர்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் இருக்கும் மிகப்பெரிய கேள்வி ?
மொத்தத்தில் கருணாநிதி அவர்களே உங்களுடைய காங்கிரஸ் விசுவாசத்தை குறைத்துக்கொண்டு த்மிழர்களையும் கவனியுங்கள் இல்லாவிட்டால் தேர்தலில் மக்கள் கவனிப்பார்கள்

வாலிப சக்தி பெற... 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!!

வாலிப சக்தி பெற... 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!!

ன்னதான் போலி மருத்துவர்களை பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தாலும் , காவல் துறையினர் கைது செய்தாலும் , இதிலிருந்து இன்னொரு பிரிவினர் தப்பித்துக்கொண்டுதான் உள்ளனர், அவர்கள் யார் தெரியுமா செக்ஸ் மருத்துவர்கள்தான் ஏனென்றால் இவர்களை பற்றி யாரும் தைரியமாக புகார் தரமாட்டார்கள், காரணம் தங்கள் குறை மற்றவர்களுக்கு தெரிந்தால் கேவலம் என்று நினைத்து வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.

நாம் அன்றாட தினசரி நாழிதள்கள் மற்றும் வார இதழ்களில் வாலிப சக்தி பெற... 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!! என்று முழுப்பக்கத்தில் இவர்களுடைய விளம்பரங்களை நாம் பார்க்கலாம், ஒருவர் நான் தான் தலை சிறந்த மருத்துவர் என்றும் மற்றோருவர் தான் பரம்பரை வைத்தியர் என்றும், இன்னொருவர் நான் 7 தலைமுறையாக ஆண்மை குறைக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் ஒரே வாரத்தில் குனப்படுத்துகிறேன். ஒவ்வொரு ஊரிலும் இன்னன்ன நாட்களில் எந்த தேதிகளில் பார்க்கலாம் என்றும் மற்றொருவர் இல்லை இல்லை ஒரெ வாரத்தில் யாராலும் குணப்படுத்த முடியாது அப்படி சொல்பவர்களை நம்பி ஏமாறவேண்டாம் நாங்கள் தான் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவர்கள் என்றும் சித்த மருத்துவம் என்பது மருந்து உட்க்கொண்டு 3 முதல் 5 நாட்களில் மாற்றம் தெரிய வேண்டும் .
இது சித்தர்கள் வாக்கு . இதன்படி எங்கள் மருந்து அதிகபட்சமாக 15 நாட்களில் வித்தியாசம் பெற்று 3 முதல் 4 மாதங்களில் பூரண குணம் பெறாலாம் என்பது உறுதி. இந்த ஊரில் இன்னன்ன நாட்களில் இந்த தேதிகளில் பார்க்கலாம் என்றும் என்றும் விளம்பரங்களை நாம் அன்றாடம் பார்த்திருப்போம் ,இதில் இவர்களிடம் வெளிநாட்டினர் வந்து வைத்தியம் பார்த்து சந்தோசமாக இருப்பது போன்று அட்டைப்படம் வேறு.
இவர்களிடம் வைத்தியம் பார்த்தவர்கள் யாருடைய நிலையிலும் முன்னேற்றம் இருக்காது , வைத்தியம் பார்த்தவர்களும் வெளியில் ஆண்மை குறைவுக்கு இன்னாரிடம் வைத்தியம் பார்த்து பயனில்லை என்று சொல்லவும் மாட்டார்கள் காரணம் தங்கள் குறை மற்றவர்களுக்கு தெரிந்தால் அசிங்கம் என்று மறைத்து விடுவார்கள் இது இவர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது .
என்னதான் மாத்ருபூதம் போன்ற பாலியல் மருத்துவர்கள் இவர்களை போன்ற போலிகளிடம் செல்ல வேண்டம் என்று சொன்னாலும் நம் மக்கள் திருந்தப் போவதில்லை அன்றும் இன்றும் என்றும் இவர்களுடைய காட்டில் அடை மழைதான் இந்த பூனைகளுக்கு எப்போது யார்தான் மணி கட்டுவார்களொ இவர்களுடைய கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை.
வழக்கம் போல் இதை தடுக்க வேண்டியவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள், ஏதாவது உயிரிழப்பு இதன் மூலம் நடந்தால்தன் புயலாக கிளம்புவார்களோ.?

விண்டோஸ் 7 ரெஜிஸ்ட்ரி பேக்கப் எடுத்தல்







விண்டோஸ் 7 ல் ரெஜிஸ்ட்ரியை முழுவதுமாக பேக்கப் எடுக்க கீழ்கண்டவாரு செயல்படவும்.



1] முதலில் விண்டோஸ் கீ+R அழுத்தவும் அல்லது START மெனு சென்று RUN ஜ கிளிக் செய்யவும்.
2] அதில் வரும் டயலாக் பாக்சில் regedit என்று டைப் செய்யவும்.


3] on file --> export ஜ தெர்ந்தெடுத்து பின்பு உங்களுக்கு தேவையான[folder ல்] பகுதியில் சேமித்துக் கொள்ளவும்...

தமிழா சிந்தித்துப் பார்.


னவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே!

இயக்குநர் சீமான்.

ஈழ மண்ணின் வளம்!

குமரி மாவட்டத்தில் பாதிக்கு மேலான அருட் தந்தையர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர அபிமானிகள். சிலர் கட்சி உறுப்பினர்களாகவும் உள்ளனர். அத்தனைபேரும் எனக்கு நண்பர்கள். கடந்த இதழ் படித்துவிட்டு இருவர் தொலைபேசினர். "மற்ற கட்சிகள் பெரிதாக என்ன செய்துவிட்டன?' என்பதாகக் கேட்டனர். அதுவல்ல பிரச்சினை. மானுடத்தின் பொது நம்பிக்கையாக தம்மை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள்- இயக்கங்கள்- கொள்கைகள் துரோகம் செய்வதுதான் பிரச்சினை என்றேன். மார்க்சிஸ்ட் கட்சி ஈழ மக்களுக்காய் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதை கவனப்படுத்தினார்கள். இன அழித்தல், போர்க்குற்றங்கள் நடக்கிறபோது இடதுசாரிகளிடம் எதிர்பார்க்கப்படுவது தாசில்தார் அலுவலகத்திற்கு முன் அடையாளப் போராட்டம் நடத்துவதல்ல "பொலீட்பீரோ'வின் அறைகூவலை நாம் கேட்டிருக்க வேண்டும் என்றேன்.

போர்க்குற்றங்களையும் இனஅழித்தலையும் மனித குலத்திற்கெதிரான பெருங்குற்றங்களாக இடதுசாரிகள் கருதுவார்களேயானால் உலக நாடுகளின் அத்தனை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் "பொலிட்பீரோ' கடிதமெழுதியிருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை அமைப்பில் தமிழர் மீதான ராஜபக்சேவின் கொடிய வெற்றியை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றிய சீனா, கியூபா, வெனிசுவேலா உள்ளிட்ட இடதுசாரி நாடுகளுக்கு தன் அதிருப்தியை எழுதியிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நடந்தபோதும் அது பேசவில்லை. இன்றுவரைக்கும் பேசவில்லை. சரி, குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளுடன் ஓர் தன்னாட்சி அரசியல் அமைப்பு தரப்பட வேண்டுமெனவேனும் ஓர் தீர்மானம் பொலிட்பீரோவில் நிறைவேற்றினார்களா வென்றால் இல்லை.

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பல்வேறு கொள்கை விஷயங்களில் வலுவான தாக்கம் ஏற்படுத்தும் சக்தியாக மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரிகள் இருந்தனர். தமிழர் பிரச்சினையை ராணுவ ரீதியாக ஒடுக்க வரிந்து நின்ற இலங்கை அரசுக்கு பின்புலமாய் நின்ற இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை குறைந்தபட்சம் ஓர் பாராளுமன்ற விவாதத்திற்குக் கூட மார்க்சிஸ்டுகள் இழுக்க வில்லை. அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்த விஷயத்தில் ஆட்சியையே கவிழ்க்க வரிந்து நின்றவர்களுக்கு அழிக்கப்பட்ட தமிழருக்காய் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூட மனம் வரவில்லையென்பதுதான் நமது வருத்தம். எனில், அத்தனை தமிழரும் அழிந்து போனால் கூடப் பரவாயில்லை- மொழி வழி தேசியம் வென்று விடக் கூடாதென்ற கொள்கை நிலைப்பாட்டில் மார்க்சிஸ்டுகள் நின்றார்களென்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் பிறிதொரு முக்கியமான போக்கும் தமிழகத்து தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர்களிடையே தெரிகிறது. கொந்தளித்துப் போயிருக்கும் மொழி-இன உணர்வு கொண்ட தமிழ் இளைஞர் களை மாவோயிஸ்டுகளின் பாசறைக்குத் திருப்ப முயலும் போக்கு அது. அவர்களது உத்தி நுட்ப மானது. இந்திய அரசு என ஒன்று இருக்கும்வரை ஈழம் மலராது. எனவே முதலில் இந்திய அரசமைப்பை உடைக்க வேண்டும். மாவோ யிஸ்டுகளின் காலம் மலர்ந்தபின்- அவர்களின் தோழமையோடு ஈழம் உருவாக்கப்படும் என்பதுதான் சுருக்கமான திரைக்கதை.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ள புறச்சூழல்கள் பற்றின விவாதம் இங்கு பொருத்தமற்றது. ஆனால் தமிழ்மொழி-இன உணர்வை, அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் இளைஞர்கள் ஒரு தொகுதியினரிடையே நிலவும் உணர்வெழுச்சியை மாவோயிஸ்ட் ஆயுதம் தாங்கிய களத்திற்கு மூலதனமாக்க முயற்சிப்பது மோசடி வேலை. இந்த மோசடிக்கு இடையூறு செய்யக்கூடியதாக, சில நேரங்களில் இந்த "மறக்க முடியுமா?' பகுதி இருப்பதால்தான் "புதிய கலாச்சாரம்' போன்றவர்களுக்குப் புழுக்கம். ஈழ அழிவுக்கு ஒட்டுமொத்த காரணமும் காங்கிரசும், தி.மு.க.வுமே என்பதாக அவர்கள் கட்டமைக்க விரும்பும் காட்சி சலனப்படுவதாய் ரொம்பவே சங்கடப்படுகிறார்கள். மற்றபடி இணையங்களில் உயிர் வாழும் அவர்களுக்கு நடேசன்-புலித்தேவன் படுகொலை என்று மட்டுமல்ல, எல்லா விஷயங்களைப் பற்றினவுமான பன்முகத் தரவுகள் நன்றாகவே தெரியும்.

தனிப்பட்ட முறையில்- தமிழகத்திற்கு தந்தை பெரியார் போதுமென்பதே என் எண்ணம். ஆயுதமின்றி ஓர் மகத்தான அரசியல்-சமூக அதிகார நகர்வினை- குறைபாடுகள் பல கொண்டிருந்தாலும் கூட- நடத்திக் காட்டிய அந்த மாபெரும் ஆளுமையை இன்றைய காலச் சூழலுக்கேற்ப மீள் கண்டெடுத்தல் செய்தாலே போதுமானதெனக் கருதுகிறேன். வன்முறைக் கலாச்சாரம் தமிழகத்தை பின்னோக்கியே தள்ளிச் செல்லும். மற்றபடி மாவோயிஸ்டுகளின் கடைசிப் பொத்தான்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லை சீனாவில் இருக்கின்றனவா என்பதும் நமக்கு சரியாகப் புலப்படவில்லை. இந்த விவாதத்தினை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம்.

தமிழகத்திலும், உலகப் புலத்திலும் உணர்வுள்ள தமிழர்கள் ஓரணியில் நின்று செயற்பட முடியாமல் ஆளாளுக்கு அக்கப்போர் செய்து கொண்டிருக்க, ராஜபக்சே அரசு மிகத்தெளிவாக முன் நகர்கிறது. இப்போது கிடைக்கிற செய்திகளின்படி, வடகிழக்கு தமிழ்ப் பகுதியின் வளங்கள் அனைத்தையும்- அதாவது தமிழீழ மக்களின் பாரம்பரிய வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று பணம் திரட்டும் பணியில் ராஜபக்சே அரசு தீவிரமாய் இறங்கியுள்ளது.

யாழ்குடாவில் சிமெண்ட் தயாரிப்பின் மூலப் பொருளான சுண்ணாம்புக்கல் பல நூறு லட்சம் டன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆசியாவிலேயே அதிக தூய்மைத் தன்மை கொண்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் யாழ்குடாவினது என்கிறார்கள். இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் முன்பு காங்கேசன்துறை சிமெண்ட் ஆலை இயங்கி வந்தது. இப்போது சுண் ணாம்புக்கல் சுரங்கங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வேலை மும்முரமாய் நடந்து வருவதாகக் கூறுகிறார்கள். மன்னார் வளைகுடாவில் ஐந்து பெரும் பெட்ரோலியக் களஞ் சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று சீனாவுக்கும், இன் னொன்று இந்தியாவிற்கும் தாரை வார்க்கப்பட்டாயிற்று. தமிழீழக் கடல், காடுகள் இவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு பன்னாட்டு வர்த்தகப் பேரங்கள் கொழும்பு நகரில் நடந்து வருவதை நம்பகமான செய்திகள் உறுதி செய் கின்றன.

ஒவ்வொன்றையும் கேள்விப் படத்தான் எனக்கே புரிகிறது இத்துணை இயற்கை வளங்கள் தமிழீழ நில-கடற் பரப்புகளில் இருப்பது. விடுதலைப்புலிகளை அழிப்பதில் சில நாடுகள் காட்டிய அதீத அக்கறைக்கு இவ்வளங்கள் மீதான குறியும் ஓர் காரணமோ என எண்ணவும் தோன்று கிறது. நேர்காணலின் போது பிரபாகரன் அவர்களிடம், ""தமிழ் ஈழம் மலர்ந்தால், தன்னிறை வான ஒரு தேசத்தை கட்டியெழுப்பத் தேவையான இயற்கை வளங்கள் தமிழீழ நிலப்பரப்பில் இருக்கிறதென நம்புகிறீர்களா?'' என நான் கேட்டபோது, ""ஓம்... நிச்சயமாக'' என்று முகம் மலர்ந்து, ஒருவகை பெருமிதம் நிறைய அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. என்னென்ன வளங்கள் என்று அப்போது அவரை நான் தொடர்ந்து வினவவில்லை. ஒவ்வொன்றாக இப்போது தெரிய வருகையில், அவரது முகத்தில் அப்போது படர்ந்த பெருமிதத் தன்னம்பிக்கையின் உள் அர்த்தம் புரிகிறது.

உண்மையில் தன் மக்களையும் நிலத்தையும் பிரபாகரன் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நேர்மையுடன் நேசித்தார். கள்ளம் தெரியாத நேசம். கபடற்ற நேசம். விலைபோகத் தெரியாத நேசம். உண்மையில் அவர் தனது தொடர்புகள் மூலம்- இன்று ராஜபக்சே செய்வதுபோல்- தமிழீழ நிலப்பரப்பின் வளங்களை உலக சக்திகளுக்குப் பங்கிட்டுத் தர வாக்குறுதிகள் தந்திருப் பாரேயானால், பயங்கரவாதிகள்' என உலக அளவில் பட்டியலிடப்பட்டு புலிகள் சுருக்கி ஒடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். திருகோணமலை அமெரிக்காவுக்கு, காங்கேசன்துறை சீனாவுக்கு, சுண்ணாம்புக்கல் ஜப்பானுக்கு, மன்னார் கடலின் பெட்ரோலியக் கிணறுகள் இந்தியாவுக்கு என பங்கு போட்டு விற்க முன்வந்திருப் பாரேயானால் ஒருவேளை உலக நாடுகள் அவரை "விடுதலை வீரன்' எனக் கொண்டாடியிருக்கக்கூடும். ஆனால் பாவம் அவர் நல்லவராயும் நீதிமானாயுமிருந்தார். தன் மக்களுக்கான வளங்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதில் விடாப்பிடியோடிருந்தார்.

ஈழ உணர்வாளர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம்- குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் கேட்பது- இப்படி நடக்குமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 2001-ல் யாழ் குடாவின் வாயிலில், தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் நின்ற நாம் எப்படி ஏழெட்டு ஆண்டுகளில் அதள பாதாளத்திற்கு வந்தோம்? பலருக்கும் இது சரியான விடைகள் இல்லா கேள்வி. என்னைப் பொறுத்தவரை முக்கிய காரணங்கள் ஐந்து.

கடற்பரப்பில் புலிகள் கட்டியெழுப்பிய மேலாண்மைதான் 1998- 2001 காலப்பரப்பில் அவர்கள் சாதித்த அபார ராணுவ வெற்றிகளுக்கு காரணம். அந்த மேலாண்மையை சமாதான காலத்தில் அவர்கள் இழந்தமை போர்க்களப் பின்னடைவுக்கான முதற்காரணம். 2000-த்தில் ஆனையிறவு பெருவெற்றியை சாத்தியப்படுத்தியது இரண்டாம் உலகப் போரின் வரலாற்றுப் பெருமைமிகு ""நார்மண்டி'' (Normandy) தரையிறக்கத்திற்கு இணையாக ராணுவ நோக்கர்களும் போரியல் நிபுணர்களும் புகழ்ந்த கடற்புலிகளின் தாளையடி- செம்பியன்பற்று தரையிறக்கம். சோழ மன்னர்களுக்குப் பின் கடலில் தமிழ்க்கொடி கம்பீரமாகப் பட்டொளி வீசிப் படபடத்துப் பறந்த நாட்கள் அவை. போரணிகள், தளவாடங்களை துரிதமாக நகர்த்துவதிலும் இலங்கை ராணுவத்திற்கான அதே ஆளணி- பொருள் விநியோக வழிகளை இடைமறிப்பதிலும் கடற்புலிகள் மிக முக்கிய பங்காற்றினர். கடல் மீதான மேலாண்மையை சமாதான காலத்தில் புலிகள் இழந்தது பாரதூரமான ஓர் பின்னடைவு. வாய்ப்பிருந்தால் பின்னர் விரிவாக இதனை நாம் நோக்கலாம்.

ஆயுதங்கள், சுடுபொருட்கள் (Arms and Ammunitions) -குறிப்பாக சுடுபொருட்கள் பற்றாக்குறை இரண்டாவது முக்கிய காரணம். இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பலருக்கும் மர்மமான கே.பி. (K.P.) என பொதுவில் அறியப்பட்ட- செல்வராசா பத்மநாபன் என்றும் குமரன் பத்மநாபன் என்றும் அறியப்பட்ட சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்ற ஆளுமை இந்த விவாதத்தில் முக்கியமானவர்.
அருட் தந்தை கஸ்பர் ராஜ்
நக்கீரன் வார இதழ் - மே 8, 2010

பிரபாகரன் உயிருடன் உள்ளார்.

டகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.



புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.


இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.



ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.


பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

-காமராஜ்
[நக்கீரன் வார இதழ்
] வெள்ளிக்கிழமை, 22, மே 2009.

தமிழினத்துரோகி...?

பெற்ற தாயை கூட்டி கொடுப்பவனுக்கும் இந்த நாய்க்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை...
கருங்காலி+எட்டப்பன்=கருணா

ஆற்க்காடு வீராச[!]மி.


இருள் சூழும் அமாவாசையின் மைந்தன் குலக்கொழுந்து???????????????????????

பிரபாகரன்


உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன்.
தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவன்.
தமிழ்த்தாயின் தலைமகன்.

கலைஞர்...?






மிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவரால் தமிழக மீனவர்களையும் ஈழத்தமிழர்களையும் காப்பாற்றமுடியவில்லை, கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சினை என்றும் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கதை விடுவார், ஆனால் இவருடைய வாரிசுகளுக்கு டெல்லி அரசியலில் பதவி இல்லையென்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார்.
தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் டெல்லிக்கு கடிதம் எழுதுவார், இவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்' சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது. கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமார் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார்.வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார். அதுவும் இல்லையென்றால் உடனே டெல்லிக்கு விமானம் ஏறுவார்,
தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருக்க தெரிந்த இவருக்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உண்ணாவிரதம் இருக்க தெரியாதா, தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தால் இவருக்கு பணம் அல்லது பதவியா தரப்போகிறார்கள் ?

மொத்தத்தில்மிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவர் ஒரு தமிழின துரோகி !

போஃபர்ஸ் ? 24 கோடியிலிருந்து 250 கோடியாக..?








ராஜிவ்கந்தியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை போஃபர்ஸ் பீரங்கிக்கு உண்டு. இடைத்தரகர்கள் மூலம் ராணுவத்திற்க்கு ஆயுதம் வாங்கககூடாது, என்கின்ற புதிய ராணுவச்சட்டத்தை உருவாக்கி அந்த சட்டத்தை அவரே மீறீனார்.
தன்னுடைய நண்பர் ஸ்வீடன் பிரதமர் பால்மே கேட்டுகொண்டதால் ஸ்வீடனில் இருந்து 1400 கோடியில் 400 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டார்,
ஆனால் போஃபர்ஸ் பீரங்கிகள் தரம் குறைந்தவை என்று ராணுவ அதிகாரிகள் சொன்னதையும் மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது, 1987 ஏப்ரல் 16-ம் தேதி ஸ்வீடன் நாட்டு வானொலி போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது. ஸ்வீடனில் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்காக இந்தியாவில் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஸ்விஸ் வங்கி மூலம் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் ஸ்வீடன் நாட்டு வானொலி வெளியிட்ட செய்தியின் சாரம்சமாகும். எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்து போராட்டத்தில் இறங்கியது. போஃபர்ஸ் பீரங்கி ஊழலை சொல்லியே வி.பி.சிங் பிரதமர் ஆனார் ,
ராஜிவ்கந்தி, போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகள், உயர்மட்ட அதிகாரிகள், இடைதரகர் குவாத்ரோச்சி, என பலர் மேல் சி.பி.ஜ வழக்கு பதிவு செய்தது . வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவாத்ரோச்சியை தவிர மற்ற அனைவருமே இறந்து விட்டார்கள். இந்தியாவை தவிர உலகின் மற்ற எல்லா நாடுகளிலும் சுற்றிய குவாத்ரோச்சியை சி.பி.ஜ அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
போஃபர்ஸ் பீரங்கி ஊழலில் குவாத்ரோச்சி மேல் குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்துவிடலாம் என்று சி.பி.ஜ கோர்ட்டில் இப்போது மனுத்தாக்கல் செய்த்துள்ளது. 64 கோடி ரூபாய் லஞ்ச ஊழலை விசாரிக்க இந்த 24 வருடங்களில் சி.பி.ஜ செலவழித்திருக்கும் தொகை மட்டும் 250 கோடி ரூபாய்.
ஆனால் தி.மு.க வின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராஜா ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மூலமாக செய்த ஊழலோ 60 ஆயிரம் கோடி ரூபாய்.


இதை யார் விசாரிப்பது ? இப்படியெல்லாம் ஊழல் மூலம் சம்பாரிப்பதால் தான் தேர்தலில் ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் 10000 வரை கொடுக்க முடிகிறது,

ஆபீஸ் இப்போது மொபைலில்...!





கம்ப்யூட்டரில் மட்டுமே நாம் இதுவரை அலுவலக கணக்குகளை மேற்கொண்டிருக்கிறோம் ஆனால் போகிற இடமெல்லாம் நாம் கம்ப்யூட்டரை எடுத்துச்செல்ல முடியுமா என்ன ?
நாம் கையில் எடுத்து செல்வது மொபைல்போன் ஒன்று மட்டுமே எனவே மொபைல்போன்களில் பயன்படுத்தும் வகையில் ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்,
நோக்கியாவின் N சீரிஸ்,E சீரிஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற போன்களில் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தாலும், விலையோ அதிகம், நோக்கியாவிலோ குயிக்ஆபிஸ் என்ற தொகுப்பு இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த வேண்டுமென்றால் குயிக்ஆபிஸ் நிறுவனத்திடமிருந்த்து பணம் செலுத்தி அதன் பின் முழுத்தொகுப்பையும் டவுன்லோடு செய்துதான் பயன்படுத்தமுடியும், மொத்தத்தில் எல்லாமெ பணம் . இலவசமாக ஏதாவது கிடைத்தால் நலம் என்ற வகையில் இனையத்தை வலம் வந்தபோது ஆபிஸ்சூட்[office suite] என்ற தொகுப்பு கண்ணில் பட்டது ஆனால் இதுவும் துரதிருஷ்டவசமாக 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என்றால் இதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும். ரெஜிஸ்டர் செய்யவேண்டும் என்றால் இதற்க்கும் பணம் செலுத்தவேண்டிய நிலை, ஆணால் இதற்க்கு ரெஜிஸ்டர் செய்யவேண்டிய ரெஜிஸ்டர் கீயும் இனையத்தில் கிடைக்காது , காரணம் இதன் ரெஜிஸ்டர் கீ மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை அடிப்படையாக வைத்து இயக்கப்படுகிறது ,. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு மேலும் இன்டர்நெட்டில் வலம் வந்தபோது ஆபிஸ்சூட்4.5 க்கான கீஜென் கிடைத்தது .கீஜென்னில் மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை கொடுத்து ஆபிஸ்சூட்4.5 க்கான கீயை பெற்றென். நீங்களும் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள். கீ வேண்டும் என்றால் உங்களுடைய IMEI எண்ணை tamizasian@ovi.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் .
இந்த சாப்ட்வேர் தொகுப்பை S60V3 [s60v3(OS-9.1,9.2,9.3):5700 Xpress Music, 6110 Navigator, 6120 Classic, 6121 Classic, 6124 Classic, 5500 Sport, 6290, E50, E51, E65, E66, N71, N73, N75, N76, N77, N81, N82, N92, N93, N93i, N95, N95 8GB, N96,Samsung G810]மொபைல்போன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆபிஸ்சூட்4.5 DOWNLOAD

ப்ரீ டவுன்லோடிங் தரும் வெப்சைட்கள்...








பொதுவாகவே இனையதளங்கள் நாம் எதை டவுன்லோடு செய்ய நினைக்கிறோமோ அதற்க்கு காசு கேட்ப்பார்கள் இதை பிரீயா கொடுத்தால் ஆகாத என்று நினைப்போம் அல்லவா,
எனவெ ப்ரீ
டவுன்லோடு வெப்சைட்களை பட்டியலிடுகிறேன் பயன்படுத்திவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்...

ங்களுடைய மொபைல்போன்களுக்கான பாடல்கள்,தீம்,கேம்ஸ்,இமேஜஸ்,வால்பேப்பர்கள்,ரிங்டோன்கள் என அனைத்துமே முற்றிலும் இலவசமே..

WORLDTAMILAN

MOBITAMILAN

tnmobi

MOBIPLANET

MOBANGO

TAMILMP3WORLD


123MUSIQ

TAMILTHENDRAL

ORUWEBSITE

CHENNAIWAP

TAMILANWAP

MOBILERAJA

TAMILMOBI

MOBIMAZA

FUNMAZA

STORE.OVI

GETJAR

BROTHERSOFT


EPOCWARE

ANUUSMUSIC

isaitamil



மேற்கண்ட தளங்களிலேயே உங்களின் தேவைகள் நிறைவேறிவிடும் அதிலும் உங்கள் தாகம் தீரவில்லையா பின்னுட்டமிடுங்கள் கூடுதல் தளங்களை இனையேற்றம் செய்கிறேன்

நன்றி...