தமிழா சிந்தித்துப் பார்.


னவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே!

இயக்குநர் சீமான்.

ஈழ மண்ணின் வளம்!

குமரி மாவட்டத்தில் பாதிக்கு மேலான அருட் தந்தையர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர அபிமானிகள். சிலர் கட்சி உறுப்பினர்களாகவும் உள்ளனர். அத்தனைபேரும் எனக்கு நண்பர்கள். கடந்த இதழ் படித்துவிட்டு இருவர் தொலைபேசினர். "மற்ற கட்சிகள் பெரிதாக என்ன செய்துவிட்டன?' என்பதாகக் கேட்டனர். அதுவல்ல பிரச்சினை. மானுடத்தின் பொது நம்பிக்கையாக தம்மை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள்- இயக்கங்கள்- கொள்கைகள் துரோகம் செய்வதுதான் பிரச்சினை என்றேன். மார்க்சிஸ்ட் கட்சி ஈழ மக்களுக்காய் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதை கவனப்படுத்தினார்கள். இன அழித்தல், போர்க்குற்றங்கள் நடக்கிறபோது இடதுசாரிகளிடம் எதிர்பார்க்கப்படுவது தாசில்தார் அலுவலகத்திற்கு முன் அடையாளப் போராட்டம் நடத்துவதல்ல "பொலீட்பீரோ'வின் அறைகூவலை நாம் கேட்டிருக்க வேண்டும் என்றேன்.

போர்க்குற்றங்களையும் இனஅழித்தலையும் மனித குலத்திற்கெதிரான பெருங்குற்றங்களாக இடதுசாரிகள் கருதுவார்களேயானால் உலக நாடுகளின் அத்தனை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் "பொலிட்பீரோ' கடிதமெழுதியிருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை அமைப்பில் தமிழர் மீதான ராஜபக்சேவின் கொடிய வெற்றியை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றிய சீனா, கியூபா, வெனிசுவேலா உள்ளிட்ட இடதுசாரி நாடுகளுக்கு தன் அதிருப்தியை எழுதியிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நடந்தபோதும் அது பேசவில்லை. இன்றுவரைக்கும் பேசவில்லை. சரி, குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளுடன் ஓர் தன்னாட்சி அரசியல் அமைப்பு தரப்பட வேண்டுமெனவேனும் ஓர் தீர்மானம் பொலிட்பீரோவில் நிறைவேற்றினார்களா வென்றால் இல்லை.

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பல்வேறு கொள்கை விஷயங்களில் வலுவான தாக்கம் ஏற்படுத்தும் சக்தியாக மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரிகள் இருந்தனர். தமிழர் பிரச்சினையை ராணுவ ரீதியாக ஒடுக்க வரிந்து நின்ற இலங்கை அரசுக்கு பின்புலமாய் நின்ற இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை குறைந்தபட்சம் ஓர் பாராளுமன்ற விவாதத்திற்குக் கூட மார்க்சிஸ்டுகள் இழுக்க வில்லை. அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்த விஷயத்தில் ஆட்சியையே கவிழ்க்க வரிந்து நின்றவர்களுக்கு அழிக்கப்பட்ட தமிழருக்காய் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூட மனம் வரவில்லையென்பதுதான் நமது வருத்தம். எனில், அத்தனை தமிழரும் அழிந்து போனால் கூடப் பரவாயில்லை- மொழி வழி தேசியம் வென்று விடக் கூடாதென்ற கொள்கை நிலைப்பாட்டில் மார்க்சிஸ்டுகள் நின்றார்களென்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் பிறிதொரு முக்கியமான போக்கும் தமிழகத்து தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர்களிடையே தெரிகிறது. கொந்தளித்துப் போயிருக்கும் மொழி-இன உணர்வு கொண்ட தமிழ் இளைஞர் களை மாவோயிஸ்டுகளின் பாசறைக்குத் திருப்ப முயலும் போக்கு அது. அவர்களது உத்தி நுட்ப மானது. இந்திய அரசு என ஒன்று இருக்கும்வரை ஈழம் மலராது. எனவே முதலில் இந்திய அரசமைப்பை உடைக்க வேண்டும். மாவோ யிஸ்டுகளின் காலம் மலர்ந்தபின்- அவர்களின் தோழமையோடு ஈழம் உருவாக்கப்படும் என்பதுதான் சுருக்கமான திரைக்கதை.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ள புறச்சூழல்கள் பற்றின விவாதம் இங்கு பொருத்தமற்றது. ஆனால் தமிழ்மொழி-இன உணர்வை, அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் இளைஞர்கள் ஒரு தொகுதியினரிடையே நிலவும் உணர்வெழுச்சியை மாவோயிஸ்ட் ஆயுதம் தாங்கிய களத்திற்கு மூலதனமாக்க முயற்சிப்பது மோசடி வேலை. இந்த மோசடிக்கு இடையூறு செய்யக்கூடியதாக, சில நேரங்களில் இந்த "மறக்க முடியுமா?' பகுதி இருப்பதால்தான் "புதிய கலாச்சாரம்' போன்றவர்களுக்குப் புழுக்கம். ஈழ அழிவுக்கு ஒட்டுமொத்த காரணமும் காங்கிரசும், தி.மு.க.வுமே என்பதாக அவர்கள் கட்டமைக்க விரும்பும் காட்சி சலனப்படுவதாய் ரொம்பவே சங்கடப்படுகிறார்கள். மற்றபடி இணையங்களில் உயிர் வாழும் அவர்களுக்கு நடேசன்-புலித்தேவன் படுகொலை என்று மட்டுமல்ல, எல்லா விஷயங்களைப் பற்றினவுமான பன்முகத் தரவுகள் நன்றாகவே தெரியும்.

தனிப்பட்ட முறையில்- தமிழகத்திற்கு தந்தை பெரியார் போதுமென்பதே என் எண்ணம். ஆயுதமின்றி ஓர் மகத்தான அரசியல்-சமூக அதிகார நகர்வினை- குறைபாடுகள் பல கொண்டிருந்தாலும் கூட- நடத்திக் காட்டிய அந்த மாபெரும் ஆளுமையை இன்றைய காலச் சூழலுக்கேற்ப மீள் கண்டெடுத்தல் செய்தாலே போதுமானதெனக் கருதுகிறேன். வன்முறைக் கலாச்சாரம் தமிழகத்தை பின்னோக்கியே தள்ளிச் செல்லும். மற்றபடி மாவோயிஸ்டுகளின் கடைசிப் பொத்தான்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லை சீனாவில் இருக்கின்றனவா என்பதும் நமக்கு சரியாகப் புலப்படவில்லை. இந்த விவாதத்தினை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம்.

தமிழகத்திலும், உலகப் புலத்திலும் உணர்வுள்ள தமிழர்கள் ஓரணியில் நின்று செயற்பட முடியாமல் ஆளாளுக்கு அக்கப்போர் செய்து கொண்டிருக்க, ராஜபக்சே அரசு மிகத்தெளிவாக முன் நகர்கிறது. இப்போது கிடைக்கிற செய்திகளின்படி, வடகிழக்கு தமிழ்ப் பகுதியின் வளங்கள் அனைத்தையும்- அதாவது தமிழீழ மக்களின் பாரம்பரிய வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று பணம் திரட்டும் பணியில் ராஜபக்சே அரசு தீவிரமாய் இறங்கியுள்ளது.

யாழ்குடாவில் சிமெண்ட் தயாரிப்பின் மூலப் பொருளான சுண்ணாம்புக்கல் பல நூறு லட்சம் டன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆசியாவிலேயே அதிக தூய்மைத் தன்மை கொண்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் யாழ்குடாவினது என்கிறார்கள். இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் முன்பு காங்கேசன்துறை சிமெண்ட் ஆலை இயங்கி வந்தது. இப்போது சுண் ணாம்புக்கல் சுரங்கங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வேலை மும்முரமாய் நடந்து வருவதாகக் கூறுகிறார்கள். மன்னார் வளைகுடாவில் ஐந்து பெரும் பெட்ரோலியக் களஞ் சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று சீனாவுக்கும், இன் னொன்று இந்தியாவிற்கும் தாரை வார்க்கப்பட்டாயிற்று. தமிழீழக் கடல், காடுகள் இவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு பன்னாட்டு வர்த்தகப் பேரங்கள் கொழும்பு நகரில் நடந்து வருவதை நம்பகமான செய்திகள் உறுதி செய் கின்றன.

ஒவ்வொன்றையும் கேள்விப் படத்தான் எனக்கே புரிகிறது இத்துணை இயற்கை வளங்கள் தமிழீழ நில-கடற் பரப்புகளில் இருப்பது. விடுதலைப்புலிகளை அழிப்பதில் சில நாடுகள் காட்டிய அதீத அக்கறைக்கு இவ்வளங்கள் மீதான குறியும் ஓர் காரணமோ என எண்ணவும் தோன்று கிறது. நேர்காணலின் போது பிரபாகரன் அவர்களிடம், ""தமிழ் ஈழம் மலர்ந்தால், தன்னிறை வான ஒரு தேசத்தை கட்டியெழுப்பத் தேவையான இயற்கை வளங்கள் தமிழீழ நிலப்பரப்பில் இருக்கிறதென நம்புகிறீர்களா?'' என நான் கேட்டபோது, ""ஓம்... நிச்சயமாக'' என்று முகம் மலர்ந்து, ஒருவகை பெருமிதம் நிறைய அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. என்னென்ன வளங்கள் என்று அப்போது அவரை நான் தொடர்ந்து வினவவில்லை. ஒவ்வொன்றாக இப்போது தெரிய வருகையில், அவரது முகத்தில் அப்போது படர்ந்த பெருமிதத் தன்னம்பிக்கையின் உள் அர்த்தம் புரிகிறது.

உண்மையில் தன் மக்களையும் நிலத்தையும் பிரபாகரன் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நேர்மையுடன் நேசித்தார். கள்ளம் தெரியாத நேசம். கபடற்ற நேசம். விலைபோகத் தெரியாத நேசம். உண்மையில் அவர் தனது தொடர்புகள் மூலம்- இன்று ராஜபக்சே செய்வதுபோல்- தமிழீழ நிலப்பரப்பின் வளங்களை உலக சக்திகளுக்குப் பங்கிட்டுத் தர வாக்குறுதிகள் தந்திருப் பாரேயானால், பயங்கரவாதிகள்' என உலக அளவில் பட்டியலிடப்பட்டு புலிகள் சுருக்கி ஒடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். திருகோணமலை அமெரிக்காவுக்கு, காங்கேசன்துறை சீனாவுக்கு, சுண்ணாம்புக்கல் ஜப்பானுக்கு, மன்னார் கடலின் பெட்ரோலியக் கிணறுகள் இந்தியாவுக்கு என பங்கு போட்டு விற்க முன்வந்திருப் பாரேயானால் ஒருவேளை உலக நாடுகள் அவரை "விடுதலை வீரன்' எனக் கொண்டாடியிருக்கக்கூடும். ஆனால் பாவம் அவர் நல்லவராயும் நீதிமானாயுமிருந்தார். தன் மக்களுக்கான வளங்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதில் விடாப்பிடியோடிருந்தார்.

ஈழ உணர்வாளர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம்- குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் கேட்பது- இப்படி நடக்குமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 2001-ல் யாழ் குடாவின் வாயிலில், தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் நின்ற நாம் எப்படி ஏழெட்டு ஆண்டுகளில் அதள பாதாளத்திற்கு வந்தோம்? பலருக்கும் இது சரியான விடைகள் இல்லா கேள்வி. என்னைப் பொறுத்தவரை முக்கிய காரணங்கள் ஐந்து.

கடற்பரப்பில் புலிகள் கட்டியெழுப்பிய மேலாண்மைதான் 1998- 2001 காலப்பரப்பில் அவர்கள் சாதித்த அபார ராணுவ வெற்றிகளுக்கு காரணம். அந்த மேலாண்மையை சமாதான காலத்தில் அவர்கள் இழந்தமை போர்க்களப் பின்னடைவுக்கான முதற்காரணம். 2000-த்தில் ஆனையிறவு பெருவெற்றியை சாத்தியப்படுத்தியது இரண்டாம் உலகப் போரின் வரலாற்றுப் பெருமைமிகு ""நார்மண்டி'' (Normandy) தரையிறக்கத்திற்கு இணையாக ராணுவ நோக்கர்களும் போரியல் நிபுணர்களும் புகழ்ந்த கடற்புலிகளின் தாளையடி- செம்பியன்பற்று தரையிறக்கம். சோழ மன்னர்களுக்குப் பின் கடலில் தமிழ்க்கொடி கம்பீரமாகப் பட்டொளி வீசிப் படபடத்துப் பறந்த நாட்கள் அவை. போரணிகள், தளவாடங்களை துரிதமாக நகர்த்துவதிலும் இலங்கை ராணுவத்திற்கான அதே ஆளணி- பொருள் விநியோக வழிகளை இடைமறிப்பதிலும் கடற்புலிகள் மிக முக்கிய பங்காற்றினர். கடல் மீதான மேலாண்மையை சமாதான காலத்தில் புலிகள் இழந்தது பாரதூரமான ஓர் பின்னடைவு. வாய்ப்பிருந்தால் பின்னர் விரிவாக இதனை நாம் நோக்கலாம்.

ஆயுதங்கள், சுடுபொருட்கள் (Arms and Ammunitions) -குறிப்பாக சுடுபொருட்கள் பற்றாக்குறை இரண்டாவது முக்கிய காரணம். இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பலருக்கும் மர்மமான கே.பி. (K.P.) என பொதுவில் அறியப்பட்ட- செல்வராசா பத்மநாபன் என்றும் குமரன் பத்மநாபன் என்றும் அறியப்பட்ட சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்ற ஆளுமை இந்த விவாதத்தில் முக்கியமானவர்.
அருட் தந்தை கஸ்பர் ராஜ்
நக்கீரன் வார இதழ் - மே 8, 2010

பிரபாகரன் உயிருடன் உள்ளார்.

டகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.



புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.


இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.



ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.


பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

-காமராஜ்
[நக்கீரன் வார இதழ்
] வெள்ளிக்கிழமை, 22, மே 2009.