புலிகளே ஜாக்கிரதை உங்கள் இடத்தில் புதிய படை. இது இங்கை அரசின் சதியாக கூட இருக்கலாம் ..!


இலங்கையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட எல்லா போராட்டக்குழுக்களும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் யாரும் ஈடுபடமுடியாது. என்று போர் முடிந்ததும் இது இலங்கை மக்களுக்கு ராஜபக்சே கூறினார்.
ஆனால் புலிகளின் தோல்விக்கு பிறகு சப்தமே இல்லாமல் இலங்கையின் கிழக்கு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு , அதே விடுதலை போராட்டத்தைத் தொடரும் முடிவோடு ஆயுதங்களை உயர்த்தி இலங்கை அரசை அதிரவைத்துள்ளது "மக்கள் விடுதலை ராணுவம்"
பிரபாகரானுக்கு பிறகு புலிகள் அமைப்பின் எதிர்காலம் குறித்து பலவித சர்ச்சைகள் அர்ங்கேறும் நிலையில் இலங்கையின் சரித்திரப்போக்கை மாற்றியமைக்கும் வலிமை கொண்டதா இவ்வமைப்பு என்ற ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளன இலங்கையில்.
கோணேஸ் என்னும் புனைபெயரைக் கொண்டவர்தான் இந்த புதிய இயக்கத்தின் தளபதியாக தன்னை அரிவித்துள்ளார், இவர் ஏற்க்கனவெ புலிகள் அமைப்பில் இருந்தவர்.
1983 களில் உத்திரப்பிரதேச காடுகளில் பயிற்ச்சி அளிக்கப்பட்ட போது பயிர்ச்சி பெற்றவர் ,பின்பு புலிகள் அமைப்புடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளினால் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி தனியாக செயல்பட்டு வந்தார்,. தொடர்ந்து கிழக்கில் இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறயிலடைக்கப்பட்டார், பின்பு அங்கு இருந்து தப்பித்து கியூபா சென்றவர் அங்கிருக்கும் போராளிக்குழுக்களிடம் சிறப்பு பயிற்ச்சி மற்றும் கொரில்லா போர் முறைகளையும் கற்றுக்கொண்டு இப்போது இலங்கைக்கு வந்துள்ளார்,

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியாக தன்னுடன் பயிற்ச்சி பேற்ற சிலரையும் இனைத்து இக்குழுவை உருவாக்கியுள்ளார், கடைசியாக நடந்த போரில் தப்பி பிழைத்த புலிகளில் சிலரும் கருணாவுடன் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த புலிப்படயினரும் ( ருணாவுடன் வந்தவர்களில் பாதிப்பேரை கருனா கண்டுகொள்ளவில்லை அவர்களும்) இவ்வியக்கத்தில் இணைந்துள்ளனர், இது மட்டும் இல்லாமல் முகாம்களில் இருக்கும் தமிழர்களில் இருந்தும் இவ்வியக்கத்தில் இணைய மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கோணெஸ் கூறியிருக்கிறார்,
இவ்வமைப்பில் இருந்து சிலர் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம், கியூபா கொரில்லா குழுக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட்களிடமும் பயிற்ச்சிக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், கோணெஸ் கூறியிருக்கிறார்,
புலிகள் அமைப்பை போலவே இவர்களும் தமிழ்ஈழம் பெற்றே தீருவது என்ற முடிவுடன் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் மேலும் புலிகளைப் போல் மரபுவழி ராணுவப் போராக இல்லாமல் கொரில்லா தாக்குதல்களையே தொடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்,

ஆனால் இவ்வியக்கம் பற்றிய மாற்று கருத்துக்களும் கிளம்பியுள்ளன , அது என்னவென்றால் இவ்வியக்கம் எதிர்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகா மற்றும் இறுதிப்போர் நடந்த போது பிரபாகரனால் பிரித்து இலங்கையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட புலிகளையும் கொன்றொழிப்தற்க்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் "மக்கள் விடுதலை ராணுவம்" என்று தமிழ் தலைவர்களில் ஒருவரான மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார்............

மொத்தத்தில் புலிகள் மற்றும் ஈழத்தமிழ் மக்களே நீங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டமிது ஆகும்...